Tuesday, February 17, 2009

குற்றமும் பிண்ணணியும்

நான்தான் முன் ஜென்மத்தில் அக்பரின் மனைவி ஜோதாபாய் என்கிறார் ஆதித்தனார் குடும்ப பெண்ணான அருணா.

அவரை அழைத்துக்கொண்டு பதேபூர் சிக்ரி, ஆக்ரா என்று ஊர் ஊராக போய் என்ன செய்கிறார் என்று வீடியோ எடுத்து காண்பித்தார்கள்.

கோபிநாத்தின் வர்ணணைகளுடன், உணர்ச்சிபூர்வமான இசையமப்புடன் அரண்மனைகளின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து புறப்பட்டார்கள்.

ஏதோ அசத்தலாக காட்டப்போகிறார்கள் என்று பார்த்தால்...

அங்கங்கே போய் நின்றார்...

என்னென்னமோ ஃபீலிங்க்ஸா இருக்கு என்றார்..

இதையெல்லாம் இழந்துட்டமேன்னு இருக்கு என்று புலம்பினார்..

இது பிரசவ அறையா?, இதுதான் குளிக்கிற அறையா? இங்கதான் கக்கூஸா என்று பக்கத்தில் வந்த கைட் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்லி விட்டு இங்க "இருந்தா" மாதிரி இருக்கு, இங்க "போனா" மாதிரி இருக்கு என்று கூறிக்கொண்டே வந்தார்.

அவ்வப்போது அரண்மணை சுவற்றில் சாய்ந்து கொண்டு கண்ல ஜலம் வெச்சுண்டு அழுகவும் செய்தார்.

இந்த இடத்தில் இப்படி இருக்கும் என்றோ...இந்த அறைக்கு இப்படி போக வேண்டும் என்று குறைந்த பட்ச அடையாளங்களை கூட கூறவில்லை.

இதற்கு 30 நாள் ட்ரெய்லர் போட்டு 3 நாள் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

ஆனால் ஒரு நல்ல விஷயம், அரண்மணைகளை நன்றாக சுற்றி காட்டினார்கள். இந்தியாவில் புராதான சின்னங்களை நன்றாக பராமரிப்பது புரிந்தது.அப்படியே ஜோதாபாய் பிறந்து, வளர்ந்த ஊர்களையும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் (அருணாவுக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லியோ?).

இதில் ஹைலைட்டே நிகழ்ச்சியின் பெயர்தான்.."நடந்தது என்ன? குற்றமும் பிண்ணணியும்" (விஜய்)...

எதை குற்றம் என்கிறார்கள்?

7 comments:

Ungalranga said...

ஹாஹா,,

"மூட நம்பிக்கைகளை வைத்து சம்பாதிப்பது எப்படி?
கோபிநாத்."
இப்படி புத்தகமே போடலாம் அவரு...
அவ்வளோ அபத்தம் இந்த நிகழ்ச்சி....

நன்றி..

இராகவன் நைஜிரியா said...

// இதில் ஹைலைட்டே நிகழ்ச்சியின் பெயர்தான்.."நடந்தது என்ன? குற்றமும் பிண்ணணியும்" (விஜய்)...

எதை குற்றம் என்கிறார்கள்? //

நல்ல கேள்விதான்... ஆனா எனக்கு பதில் தெரியலீங்க..

யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க

அறிவிலி said...

ராகவன்,ரங்கன்

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த லைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அறிவிலி said...

வலைப்பூக்கள்...

எப்படியோ தேடி புடிச்சு எல்லாரையும் சேத்துர்றீங்க..
மிகவும் நன்றி.

Anonymous said...

Vijay TV - Gopinath is preparing part 2 of this episode in Eervadi with the same set of participants...

Its due for relay in another few days.

அறிவிலி said...

//Anonymous said...
Vijay TV - Gopinath is preparing part 2 of this episode in Eervadi with the same set of participants...

Its due for relay in another few days.//

எர்வாடி மட்டுமல்ல, கீழ்ப்பாக்கம், குணசீலம் மற்றும் பலப்பல இடங்களுக்கும் உலா போவதாக கேள்விப்பட்டேன்.

Post a Comment

எச்சரிக்கை - பின்னூட்டம் போடாமல் செல்பவர்களுக்கு என்னுடைய பதிவுகளின் தொகுப்பு அனுப்பி வைக்கப்படும்.

ஆபத்துகளை வருமுன் தடுப்பதே நல்லது.