நேற்று நடந்த நெதர்லாந்து - ப்ரேசில் மோதலில் எதிபாராத விதமாக நெதர்லாந்து வெற்றி பெற்று சூதாட்டத்தில் பணம் கட்டிய பலர் வயிற்றில் உதைத்தது.
இன்று, இன்னும் சில நிமிடங்களில் மிக முக்கியமான அடுத்த காலிறுதி ஆட்டம். கட்டுக்கோப்பான ஜெர்மன் அணிக்கும் கட்டவிழ்த்த காளைகளாய் விளையாடும் அர்ஜென்டினாவுக்குமான ஆட்டம்.விட்டால் களமிறங்கி ஆடிவிடுவார் போல பரபரப்பாக இருக்கும் மரடோனா மற்றும் அவர் வாரிசாக கருதப்படும் லியோனல் மெஸ்ஸி ஆகியோரால் அர்ஜென்டினா ஜெயிக்க வேண்டும் என்று மனம் விரும்பினாலும் ஜெர்மனிதான் ஜெயிக்கும் என்று மனசாட்சி சொல்கிறது.

இந்த லட்சணத்தில் ஆக்டோபஸ் ஜோசியம் வேறு. ஜெர்மனியில் இருக்கும் ஒரு அக்வேரியத்தில் பால் என்ற ஆக்டோபஸ் இருக்கிறது. இதுவரை நடந்த அனைத்து ஜெர்மனி மேட்சுகளின் முடிவுகளையும் துல்லியமாக கணித்து சொல்லியிருக்கிறதாம் இந்த ஆக்டோபஸ்.

இரண்டு பிளாஸ்டிக் கிண்ணங்களில் இரு நாட்டு கொடிகளையும் ஆக்டோபஸுக்கான உணவையும் போட்டு பால் இருக்கும் தொட்டிக்குள் இறக்கி விடுவாரகள். அது எந்த கிண்ணத்திலிருக்கும் உணவை முதலில் சாப்பிடுகிறதோ அந்த நாடுதான் போட்டியில் ஜெயிக்குமாம்.செர்பியா ஜெர்மனி போட்டியில் கூட ஜெர்மனி தோற்கும் என்று கணித்ததாக கூறி சிலாகிக்கிறார்கள்.
பால், இன்றைய போட்டியில் ஜெர்மனிதான் ஜெயிக்கும் எண்று சொல்லியிருக்கிறது.
போட்டிக்கு இன்னும் 5 நிமிஷந்தான் இருக்கு. டிவி பாக்க போறேன். வர்ட்டா.....
