Showing posts with label பதிவரசியல். Show all posts
Showing posts with label பதிவரசியல். Show all posts

Friday, March 13, 2009

சிட்டுகுருவி லேகியமும் தமிழ் பதிவரும்

காளிமுத்து விளம்பரம் வெளியிடும் பத்திரிகையின் ஆசிரியரும் அதை படிப்பவர்களும் ஆண்மைக்குறைவானவர்கள் என்றால்...

(மு.கு-இதை நான் ஏன் எழுதுகிறேன் என்பது அனேகமாக பலருக்கும் புரிந்திருக்கும். புரியாதவர்கள் தமிழ்மணத்திலோ, தமிலிஷிலோ போய் ஆண்மைக்குறைவை பற்றிய பதிவை தேடி பாருங்கள்.)

1. சோப்பு விளம்பரம், நாறப்பயல்களுக்காக குளிக்காதவர்கள் வெளியிடுவது.
2.இட்ச்கார்ட் விளம்பரம் வரும் பத்திரிக்கைகளை நீங்கள் வாங்கினால் உங்களுக்கும் சொறி இருப்பதாக அர்த்தம்.
3. துணி கடை விளம்பரம் வரும் பத்திரிகைகாரர்களும், படிப்பவர்களும் ஆதிவாசிகள். அவர்களெல்லாம் அம்மணமாக அலைகிறார்கள்.
4.சரவணபவன் விளம்பரம் வரும் டிவிகாரர்களும் அதன் நேயர்களும் சாப்பிடாமல் பர்மனென்ட்டாக உண்ணாவிரதம் இருப்பவர்கள்.
5.பள்ளி கல்லூரி விளம்பரம் போடும் பத்திரிகை ஆசிரியரும் , வாசகர்களும் எழுத படிக்க தெரியாதவர்கள்.
6.சானிடரி நாப்கின் விளம்பரம் வெளியிடுபவர்களுக்கும், வாசகர்களுக்கும் 30 நாளும்...
7 பற்பசை விளம்பரம் வெளியிடும் ஊத்த வாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் நேயர்கள் அனைவருக்கும் வாய் துர்நாற்றம்.
8. மொடா குடியர்கள்தான் "குடி குடியை கெடுக்கும்" விள்ம்பரம் போடுவார்கள்.
9. இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் போட்டாலோ,அதை நீங்கள் பார்த்தாலோ நாளைக்கு உங்களுக்கு பால்.

போதும் விடுங்க...

Friday, February 20, 2009

காஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்

ஒரிஜினல் கேள்விகள் இங்கே....


1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?

பத்துக்கே காதுல புகை வர்ர அளவுக்கு யோசிக்க வேண்டி இருக்கு.


2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?

மேல் இருக்கும் பதிலே இதுக்கும்.


3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?

எப்படியும் இவங்களும் பதில் சொல்லப்போறதில்ல அதனால...


4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?

என்னோட கேள்விகளுக்கு(முந்தைய பதிவுல) பதில் சொன்னா, எனக்கு நைஜீரியா லாடடரி பரிசு வந்த உடன பாதி உண்டு.


5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?

தலைய சொறிஞ்சு சொறிஞ்சுதான்


6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?

அப்படியாவது பதில் கிடைக்குதான்னு பார்க்கத்தான்.


7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?

பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..


8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?

இத முதல் கேள்வியா இல்ல கேட்ருக்கனும்


9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?

இல்ல. பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டாத்தான்.


10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?

நீங்களும் இதே மாதிரி ஒரு பத்து பதில் எழுதிருங்க.

பின்னூட்டத்துலதான் மொதல்ல பதில் சொன்னேன்.
கஷ்டப்பட்டு பதில் எழுதிட்டு அத நம்ம பதிவுல போடலேன்னா எப்படி?