Saturday, March 28, 2009

யூத் விகடனில் நான் - ஜீப்புல ஏறிட்டோமில்ல...

சமீபத்தில் நான் "நான் AND ஜெர்ரி" என்ற இடுகையில் எழுதியதை யூத்ஃபுல் விகடன்.காம் இணையதளத்தில் "விட்" பிரிவில் வெளியிட்டு இருக்கிறார்கள்.




என்னையும் ஒரு ரவுடியாக மதித்து , ஜீப்பில் ஏற்றிய "யூத்ஃபுல் விகடனுக்கு" மனமார்ந்த, இதயங்கனிந்த, நெஞ்சார்ந்த, உளமார்ந்த... நன்றிகள் பல.

யூத் விகடனில் நேரடியாக படிக்க இங்கே சொடுக்கவும்.

Friday, March 27, 2009

கடவுளே... நம்ம கூட்டணிய எப்படியாவது...



























கடவுளே உங்களையும் எங்களையும் கூட்டணிக்கு சேர்த்திருக்கிற கேப்டன்கிட்டேருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் எப்படியாவது நீங்கதான் காப்பாத்தணும்.

Tuesday, March 24, 2009

நான் AND ஜெர்ரி

(மு.கு. இந்த பதிவு ஒரு திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையை விவரிப்பதால் 18 வயசுக்கு குறைவானவர்கள் பெற்றோர் துணையுடன் படிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.)

"என்னங்க.. என்னங்க.." என்று தன் எட்டு கட்டை ஸ்தாயியில் விளித்துக் கொண்டே வந்தாள் என் பத்தினி.

நான் வழக்கம் போல், பக்கத்தில் வரவிட்டு காது செவிப்பறை கிழியும் அபாயத்திற்க்கு சற்று முந்தைய என்னங்கவிற்கு...

"கூப்டியா?, சொல்லு என்ன விஷயம்", என்றேன்.

"வடை வேணும்னா, கேக்க கூடாதா? நானே தந்துட்டு போறேன். அதுக்காக இப்படித்தான் பிச்சு பிச்சு தின்னுப்புட்டு, கிச்சன் பூரா இறைச்சு வெக்கிறதா..."

"எது?, காலைல உங்களுக்கு புடிக்குமேன்னு செஞ்சேன்னு சொல்லி ஆசையா குடுத்தியே அதுவா?" ("காலைல சூடா இருக்கும்போதே, நீ திட்டுவியேன்னுதான் தொண்டை அடச்சாலும் பரவால்லேன்னு நாலு தின்னேன். அதையா திரும்பவும் சாப்ட்டியான்னு கேக்கறே?")

"ஆமா.. சாப்டீங்களா இல்ல கடிச்சு துப்பினீங்களா? யார் இதெல்லாம் க்ளீன் பண்றது?"

"என்னப்பா சொல்ற, நான் கம்ப்யூட்டர வுட்டு ஏந்திரிக்ககவே இல்லியே..."

"அப்ப அந்த பய வேலையா இருக்குமோ? அவன் காலையிலியே ஒண்ணு போதும்னுட்டானே...(ஹ்ம்ம்ம்... அவனுக்கு விவரம் ஜாஸ்தி) என்று புத்திர சிகாமணியை திட்டி கொண்டே வேலையை பார்க்க போய் விட்டாள்."

அடுத்த நாள்... நான் குளியலறையிலிருந்து, "ராஜீஈஈஈஈ......."

"என்னங்க வழுக்கி விழுந்துட்டீங்களா?" என்று ஆவலாய் பார்க்க ஒடி வந்தாள்.

"நேத்துதான் புது சோப்பு எடுத்து போட்டேன் அதுக்குள்ள காணுமே, எங்க?"

"எனக்கென்ன தெரியும்.. நீங்கதான் ஒரு வேளை, புதுசா சேந்த லேடி மேனேஜர் முன்னாடி பளிச்சுனு தெரியணும்கறத்துக்காக முழு சோப்பையும் ஒரே நாள்ள தேச்சு காலி பண்ணீட்டீங்களோ என்னமோ.." என்றாள்.

என் முறைக்கும் பாவனையை (பின்ன நெசமாவா முறைக்க முடியும்) கண்டு, "சரி.. சரி.. புது சோப்பு தரேன் குளிச்சிட்டு வந்து உங்க மோப்ப சக்தியெல்லாம் வெச்சு துப்பறியுங்க" என்று சோப்பை கொடுத்துவிட்டு சென்றாள்.

குளித்துவிட்டு வந்து அலமாரியில் பார்த்தால் தேங்காய் எண்ணெய் பாட்டில்(ப்ளாஸ்டிக்) கவிழ்ந்து அத்தனை எண்ணையும் கொட்டி கிடந்தது.பாட்டிலை எடுத்து பார்த்தால் மூடி டைட்டாகதான் இருந்தது, ஆனால் அடியில் சூடு பட்டது போல ஒட்டை.

"ஆஹா... நம்மளை மீறிய ஒரு அமானுஷ்ய சக்தி வீட்டுக்குள்ள இருக்குடா" என்று லேசாக புரியத் துவங்கியது.

சாயங்காலம் என் மனைவி "குழி பணியாரம் செய்யலாம்ணு இருக்கேன், மேல அட்டத்துல இருக்கற சட்டிய கொஞ்சம் எடுத்துக்கொடுங்க" என்றாள்.

முந்தின தடவை பணியாரம் என்று செய்த வஸ்து ஞாபகத்தில் வந்து பயமுறுத்தினாலும் வேறு வழியில்லாமல் ஸ்டூலை போட்டு எக்கி எடுக்கும்போது......

4x2 இன்ச் சைஸில் பந்து போன்று ஏதோ ஒன்று என் தோளுக்கு மேல் பறந்தது போல் தோன்றியது.

அடுத்த வினாடி, "வீஈஈஈஈஈல்".....சூப்பர் சிங்கர் வெஸ்டெர்ன் மியூசிக் சுற்றில் ராகினி ஸ்ரீ உச்ச குரலில் கத்தினாரே அது போன்ற ஒரு சத்தம் என் மனைவியிடமிருந்து... (சம்பவம் பழசு, உவமை மட்டும்தான் புதுசு...)

நானும் திகிலடைந்து சட்டி வேறு, நான் வேறாக விழுந்தேன்.

"எலிங்க... பெரிய எலி..." என்று வீஈஈலுக்கு விளக்கமளித்தாள்.

விழுந்தவாக்கில் விட்டத்தை பார்த்து யோசித்ததில் வடை, சோப்பு, தேங்காய் எண்ணெய் மற்றும் அந்த அமானுஷ்யம் என்று அனைத்திற்க்கும் விடை கிடைத்தது.

மேலே ஏறி திரும்பவும் பார்த்ததில்.. காணாம போன சோப்பு, ஒரு பாதி வெங்காய துண்டு (அய்... நான் போன வாரம் தோச கல்லு துடைக்க வெச்சிருந்தத காணோம்னு தேடினேன்-மனைவி), தேங்காய் பத்தை, என் பழைய அண்டர்வேர் என்று ஒரு பெரிய கொள்முதல் கிடங்கே இருந்தது.கையோடு அட்டம் முழுவதையும் சுத்தம் செய்து வைத்தோம்.

சரிதான் ஒடிப்போயிடுச்சே, இனிமே வராதுன்னு நெனைச்சா நாளொரு பொருள் காணாமல் போவதும் பொழுதொரு சாமானை வீணடிப்பதுமாக எலியாரின் திருவிளையாடல் தொடர்ந்து கொண்டிருந்தது.

உச்ச கட்டமாக, ஆசையோடு நான் 5ம் பிறந்தநாளுக்கு (கல்யாணத்துக்கு பிறகு) வாங்கி கொடுத்த காட்டன் நைட்டியை அவர் குதறி வைக்கவும் என் பாரியாள் காளியாக மாறி ஒரு எலி பிரச்னையை சால்வ் பண்ணத்தெரியல நீயெல்லாம் ஒரு...ஒரு.... இஞ்சினியரா என்ற அளவுக்கு திட்டி தீர்த்துவிட்டாள்.

என் இஞ்சினியரிங் சிலபஸ்சில் இது இல்லாத காரணத்தாலும், முன் அனுபவம் இல்லாத குறையாலும் என் அலுவலக/வெளி நண்பர்களிடம் யாரவது எலி பி(அ)டிக்கும் நிபுணர்கள் உண்டா என்று விசாரித்தேன்.அவர்கள் யோசனைப்படி முதலாவதாக...

பொறியில் வடை வைத்து பார்த்ததில் சீந்தவேயில்லை. சரி நம்ம வீட்டு வடை டேஸ்டு அதுக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுனால சாப்புடலன்னு நெனைச்சு, பக்கத்துல இருக்கற டீக்கடைலேருந்து ஒரு மசால் வடை வாங்கி பாதியை பையனுக்கு கொடுத்துவிட்டு (அப்பா.. நல்லா இருக்குப்பா...) மீதியை பொறியிலும் வைத்தேன்.அதுக்கும் அது ஏமாறவில்லை.

இரண்டவதாக எலி பாஷாணத்தை பல விதங்களிலும் ட்ரை பண்ணியதிலும் தோல்விக்காயை(வெற்றிக்கனிக்கு எதிர்ப்பதம்)த்தான் சந்தித்தேன்.

மூன்றாவதாக சொன்ன பூனை வளர்ப்புக்கு என் மனம் ஒப்பவில்லை.

எலியாரின் அழிச்சாட்டியம் ஷூ,சாக்ஸ், பாய், போர்வை,கம்ப்யூட்டர் வயர் என்று வளர்ந்துகொண்டே போக,அவரை என் பரம வைரி லிஸ்டில் சீனியர் மோஸ்ட் பொசிஷனுக்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டேன்.

அடுத்த சில நாட்களில் பையனுக்கு பள்ளி விடுமுறை வரவும் பத்து நாள் பேச்சிலர் (அய்யா... ஜாலி...) வாழ்க்கை. ஒரு நாள் இரவு எட்டு மணி போல பரோட்டா பொட்டலமும், பீர் பாட்டிலுமாக வீட்டுக்குள் நுழைந்து விளக்கை போட்டதும், எலியார், ஹாலிலிருந்து உள் அறைக்கு ஒடியதை பார்த்தேன்.உடனடியாக மனதிற்குள் ஒரு மாஸ்டர் ப்ளான் உருவானது.

ரூமுக்குள் நுழைந்து ஜன்னல் கதவு எல்லாவற்றையும் மூடி விட்டேன்.ரூமில் இருக்கும் அத்தனை பொருளையும் ஜாக்கிரதையாக திரட்டி கதவுக்கு வெளியே வைத்தேன்.

அந்த அறையில் அலமாரிக்கு மேல் அந்த கால மர்ஃபி வால்வ் ரேடியோ ஒன்று உண்டு. என் தநதை (ஆண்டெனாவெல்லாம் செட் பண்ணிணா பிபிசி டைரெக்டா ரிசீவ் பண்ணும் - என் அப்பா) வழி சொத்து அது.விஜய் மல்லையா போன்றவர்கள் பிற்காலத்தில் ஏலத்தில் கேட்க வாய்ப்பு இருப்பதாக எண்ணி பத்திரமாக வைத்திருந்தேன்.

ஒரு ஆளாக இந்த ரேடியோவை இறக்க முடியாது என்பதால் அதுவும், கொஞ்சூண்டு தெர்மோகோலும்தான் அறைக்குள் மீதி இருந்தது. நம்ம ஹீரோ நிச்சயமா ரேடியொவுக்குள்ளதான் ஒளிந்திருக்க வாய்ப்பிருந்தது.

வெளியே வந்து கதவை இருக்க மூடி தாள் போட்டு, அடியில் இருந்த கொஞ்சம் இடைவெளியையும் அட்டை, செங்கல் என்று பலவற்றையும் கொண்டு மூடிவிட்டேன்.

மூன்று நாளுக்கு கதவை திறக்கவேயில்லை. நாலாம் நாள்
மெ....................து........................வா.......................க
கதவை திறந்தால் அறை முழுவதும் தெர்மோகோல் குப்பை. சிறிது நேரம் அமைதியாக வெய்ட் பண்ணி ஏதாவது அசைவு தெரிகிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை. அடி மேல் அடி வைத்து உள்ளே நுழைந்து பார்த்தால் ஒரு மூலையில் நம் எதிரி ஒருக்களித்து படுத்திருந்தார்.

கல்யாணத்தில் காசி யாத்திரைக்கு கொடுத்த குடையை வைத்து தூஊஊஊஊஊரத்தில் நின்று கொண்டு தரையில் நாலு தடவை டொக்கினேன்.எலியாரின் வால் மட்டும் லேசாக ஆடியது. அப்படியே ஜகா வாங்கி திரும்பவும் கதவை மூடி... அட்டை, செங்கல்,இத்யாதி சடங்குகளையும் பொறுப்பாய் செய்தேன்.

அடுத்த நாளும் குடை.. டொக்.டொக்..டொக்...

ஆனால் நம்ம ஹீரோவிடம் சலனம் துளியும் இல்லை. ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பைக்குள் குடைக்கம்பியால் அவரை உள்ளே தள்ளி முடிச்சு போட்டு அரை கிலோமீட்டர் தள்ளி கொண்டு போய் எறிந்துவிட்டு ஒரு குரூர புன்னகையுடன் வீடு திரும்பினேன்.

வெற்றிக்களிப்பை சகதர்மினிக்கு ஃபோன் போட்டு பகிர்ந்து கொண்டு அவருடைய ஏகோபித்த பாராட்டையும் பெற்றேன்.

ஆனாலும் ஒவ்வொரு முறை "மூஷிக வாஹன மோதக ஹஸ்த" என்று பிள்ளையாருக்கு ஸ்லோகம் சொல்லும்போதும் லேசாக குற்ற உணர்ச்சி எட்டி பார்ப்பது என்னவோ உண்மை.

நீதி 1: எலிகளுக்கு தெர்மோகோல் உகந்த உணவு இல்லை.

நீதி 2: எலிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் 3 நாள் வரை உயிரோடு இருக்கும்.

Tuesday, March 17, 2009

நீங்க 5 ஆம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

"Are you smarter than a 5th grader?"

இது மிக சுவாரசியமான ஒர் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி.ஆஸ்திரேலியாவின் ஃபாக்ஸ் ப்ராட்காஸ்டிங்க் கம்பெனியால் தயாரிக்கப்பட்டு பல நாடுகளிலும் சக்கை போடு போடும் ஒரு நிகழ்ச்சி.

ஆசிரியர்கள், விஞ்ஞானிகள்,பொறியியல் வல்லுநர்கள் என்று பலரையும் கூப்பிட்டு வைத்து ஐந்தாம் வகுப்பும் அதற்கு கீழேயும் இருக்கும் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்பார்கள். கூடவே துறு துறுவென்று அறிவுக்களை சொட்டும் சில பொடிசுகளையும் நிற்க வைத்திருப்பார்கள். பெரியவர்கள் பதில் தெரியாமல் ஞே..வென்று முழித்துக்கொண்டோ, அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டோ, தலையை சொறிந்து கொண்டோ இருக்கும்போது இந்த சிறிசுகள் பஸ்ஸரை அமுத்திவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு நிற்கும்.விடை தெரியாவிட்டால் அவர்கள் தெரிவு செய்திருக்கும் சுள்ளானிடம் உதவி கேட்கலாம்.

கடைசியில் தோற்று வெளியேற வேண்டியிருந்தால், " நான் ஐந்தாம் வகுப்பு மாணவனைவிட புத்திசாலி இல்லை" என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு வெளியேறவேண்டும்.

இப்பத்தான் விஷயத்துக்கே வரேன்.

என் பையனுக்கு சென்ற வருடம் (4ம் வகுப்பு) வீட்டு பாடமாக கொடுக்கப்பட்ட ஒரு கணக்கும், ஒரு ஆங்கில கேள்வியும் கீழே.

கணக்கு - ஒரு பண்ணையில் சில ஆடுகளும், கோழிகளும் ஒரிடத்தில் நின்று கொண்டிருந்தன.மொத்தம் 40 தலைகளும் 100 கால்களும் இருந்தன. எத்தனை ஆடு, எத்தனை கோழி இருந்தது?

ஆங்கிலம் - She is very lucky to have such obedient sons and daughter-in-laws
இந்த வாக்கியத்தில் உள்ள தவறு என்ன?

இந்த கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் பதில் சொன்னால் யுனிவர்சிட்டி ஆஃப் டுபாக்கூரின் அஞ்சாம்ப்பு சான்றிதழ் வி.பி.பி யில் அனுப்பி வைக்கப்படும்.

Friday, March 13, 2009

சிட்டுகுருவி லேகியமும் தமிழ் பதிவரும்

காளிமுத்து விளம்பரம் வெளியிடும் பத்திரிகையின் ஆசிரியரும் அதை படிப்பவர்களும் ஆண்மைக்குறைவானவர்கள் என்றால்...

(மு.கு-இதை நான் ஏன் எழுதுகிறேன் என்பது அனேகமாக பலருக்கும் புரிந்திருக்கும். புரியாதவர்கள் தமிழ்மணத்திலோ, தமிலிஷிலோ போய் ஆண்மைக்குறைவை பற்றிய பதிவை தேடி பாருங்கள்.)

1. சோப்பு விளம்பரம், நாறப்பயல்களுக்காக குளிக்காதவர்கள் வெளியிடுவது.
2.இட்ச்கார்ட் விளம்பரம் வரும் பத்திரிக்கைகளை நீங்கள் வாங்கினால் உங்களுக்கும் சொறி இருப்பதாக அர்த்தம்.
3. துணி கடை விளம்பரம் வரும் பத்திரிகைகாரர்களும், படிப்பவர்களும் ஆதிவாசிகள். அவர்களெல்லாம் அம்மணமாக அலைகிறார்கள்.
4.சரவணபவன் விளம்பரம் வரும் டிவிகாரர்களும் அதன் நேயர்களும் சாப்பிடாமல் பர்மனென்ட்டாக உண்ணாவிரதம் இருப்பவர்கள்.
5.பள்ளி கல்லூரி விளம்பரம் போடும் பத்திரிகை ஆசிரியரும் , வாசகர்களும் எழுத படிக்க தெரியாதவர்கள்.
6.சானிடரி நாப்கின் விளம்பரம் வெளியிடுபவர்களுக்கும், வாசகர்களுக்கும் 30 நாளும்...
7 பற்பசை விளம்பரம் வெளியிடும் ஊத்த வாய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும் நேயர்கள் அனைவருக்கும் வாய் துர்நாற்றம்.
8. மொடா குடியர்கள்தான் "குடி குடியை கெடுக்கும்" விள்ம்பரம் போடுவார்கள்.
9. இன்ஷூரன்ஸ் கம்பெனி விளம்பரம் போட்டாலோ,அதை நீங்கள் பார்த்தாலோ நாளைக்கு உங்களுக்கு பால்.

போதும் விடுங்க...

11 பற்றிய சில விஷயங்கள்

(மு.கு. எல்லோரும் இந்த வாரம் பதினொன்னு பதினொன்னா எழுதறாங்க. நான் 11 பத்தி எழுதறேன்.)

11-11-11(1911) தேதியில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்த ஒரு பத்தி கீழே.



நம்மில் பெரும்பாலோனார் அடுத்த 11-11-11(2011)இல் பதிவு போடலாம்.
(இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கும் 11 பதிவுகளை மீள்பதிவும் இடலாம்.)

11ம் தேதிகளில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்
************************************************************
ஜனவரி 11,1973 - ராகுல் திராவிட் பிறந்த தேதி
ஃபிப்ரவரி 11,1847 - நமக்கெல்லாம் பல்ப் கொடுத்த தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தேதி

மார்ச் 11,1931 - ராபர்ட் முர்டோக் - ஊடக அரசன் பிறந்த நாள்
மார்ச் 11,1985 - கொர்பசேவ் - ரஷ்யாவின் தலைவரான நாள்.

ஏப்ரல் 11,1979 - இடி அமீன் உகாண்டா அதிபர் பதவியை இழந்த நாள்.
ஏப்ரல் 11,1814 - நெப்போலியன் தன் ஃப்ரென்ச் அரசர் பட்டத்தை துறந்தார்.

மே 11,1949 - தாய்லாந்து நாட்டுக்கு அந்த பெயர் வந்த தினம்.

ஜூன் 11, 1964 - நெல்ஸன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஜூலை 11 - ஐ.நா. சபை மக்கள் தொகை நாளாக கொண்டாடுகிறது.
ஜூலை 11,1924 - மங்கோலியா சீனாவிடமிருந்து பிரிந்து சுதந்திரம் அறிவித்தது.

ஆகஸ்ட் 11,1943 - பாக் முன்னாள் அதிபர் பெர்வேஷ் முஷரஃப் பிறந்தார்.
ஆகஸ்ட் 11,1968 - ஹி...ஹி.... நான் பொறந்து 8 நாள் ஆயிருந்துது.

செப்டெம்பெர் 11,2001 - அமெரிக்காவின் கறுப்பு நாள். மண்ணில் சரிந்தது இரட்டை கோபுரங்கள் மட்டுமா?

அக்டோபர் 11,1884 - முன்னாள் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மனைவி பிறந்த நாள்.

நவம்பர் 11, போலந்து, அங்கோலா நாடுகளின் சுதந்திர தினம்.
நவம்பர் 11,1962- நடிகை டெமி மூர் பிறந்த நாள்.
நவம்பர் 11,1974 -டைட்டானிக் புகழ் லியோனார்டோ டிகப்ரியோ அவதரித்த நாள்.

டிசம்பர் 11,1931 - ஓஷோ, பகவான் ரஜனீஷ் பிறந்த நாள்.

Sunday, March 8, 2009

ஆம்பளைங்க தினம் - ஒரு அவசியத் தேவை

மகளிர் தின நிகழ்ச்சிகளுக்கான தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்துவிட்டு என் பையனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்.

(அ- அப்பா, பை - பையன்)

பை:- அப்பா " இன்னிக்கு என்னப்பா மகளிர் தினம், மகளிர் தினம்கறாங்களே, அப்படின்னா என்னப்பா?"

அ:- அது வந்துப்பா பொம்பளைங்க எல்லாரும் ஆம்பளைங்களுக்கு ஈக்வலா எல்லாத்துலயும் ரைட்ஸ் வேணும்னு கேக்கறதுக்காக இப்படி ஒரு நாள கொண்டாடுறாங்கப்பா.

பை:-எங்க இருக்கற பொம்பளைங்க,யாருகிட்ட, எதுல ரைட்ஸ் வேணும்னு கேக்கறாங்க?

அ:-வீட்ல, நாட்ல, படிப்புல எல்லாத்துலயும்தாம்ப்பா.

பை:-என்னப்பா சொல்ற?,நம்ப வீட்ல அம்மாதான் தினமும் என்ன சாப்பாடுன்னு முடிவு செஞ்சு செய்யறாங்க.அதத்தான் நாம சாப்புடறோம்.பேங்க் ATM கார்ட் அம்மாட்டதான் இருக்கு. உனக்கு காசு வேணும்னா அம்மாட்ட வாங்கிட்டு போற.எனக்கு ஸ்கூல் கேண்டீன்ல சாப்பிட அம்மாதான் காசு கொடுக்கறாங்க.

அ:-டேய், நம்ம வீடு மாதிரியே எல்லார் வீட்லயும் இருக்காதுடா. அது மட்டும் இல்லாம வெளி உலகத்தையும் பார்க்கணும்டா.

பை:-இல்லப்பா, நான் பாத்து எல்லா ஃப்ரெண்ட்ஸ், க்ளாஸ் மேட்ஸ் எல்லாருமே இப்பிடித்தான்.ஏன் நம்ம ஊர்ல கூட பாட்டி தான் எல்லாம் வாங்கித்தருவாங்க.

அ:-நெறைய பேர் வீட்ல கேர்ள்ஸ்லாம் படிக்க வைக்கவே மாட்டாங்கப்பா.வளர்ந்தவுடன கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டு வேலயெல்லாம் செஞ்சுகிட்டே இருந்துருவாங்க.

பை:-இல்லப்பா, என் க்ளாஸ்ல 30 ஸ்டூடண்ட்ஸ்ல 18 கேர்ள்ஸ்.என் க்ளாஸ் டீச்சர் ஒரு லேடி. என் ஸ்கூல் ப்ரின்சிப்பால் ஒரு லேடிதான். அவங்க சொல்றததான் எங்க பிஸிகல் எஜுகேஷன் டீச்சர் மாதிரி ஆம்பள டீச்சர்ஸ்லாம் கூட கேப்பாங்க.

அ:-சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடுப்பா. இங்கல்லாம் எல்லாருக்கும் ஈக்வலா சான்ஸ் கெடைக்கும்.ஆனா இந்தியா மாதிரி ஒரு வளர்ற நாட்ல இதெல்லாம் தேவைப்படும்ப்பா.

பை:-நானும் இந்தியாவுல ஒண்ணாவது படிக்கும்போது என் கூட நெறைய கேர்ள்ஸ் படிச்சாங்களே?

அ:-நீ படிச்சது சிட்டில. வில்லேஜஸ்ல எல்லாம் வேற மாதிரி இருக்கும்.

பை:-அவுங்க ஊர்லயெல்லாம் கேர்ள்ஸ டிவி பார்க்க உடுவாங்களா?

அ:-ஏன் கேக்கற?

பை:-இல்லாட்டி அவுங்களுக்கெல்லாம் மகளிர் தினம்னு எப்படி தெரியும்?

அ:-இல்லடா இந்த நிகழ்ச்சியெல்லாம் பாக்கற எல்லார்க்கும் ஒரு அவேர்னஸ் வந்து மாறணும்ணுதான்.

பை:-எல்லாரும் மாறிட்டா என்ன ஆகும்?

அ:-லேடிஸ்லாம் நல்லா படிச்சு பெரிய பதவிக்கெல்லாம் வருவாங்கப்பா.

பை:-ப்ரெசிடென்ட்டுதானே இந்தியாவுல மிகப்பெரிய பதவி?

அ:-ஆமா..

பை:-இந்தியாவோட ப்ரெசிடென்டே லேடிதானே...அடுத்த ப்ரைம்மினிஸ்டர் சோனியாவா, அத்வானியான்னு தானே போட்டின்னு அன்னிக்கு சொன்னிங்களே?
ஆஆங்க்... அப்பற்ம் நெறைய பேரு ஜெயலலிதா கால்ல உழுந்து கும்புடறத டிவில காட்றாங்களே?


என் மனைவி:- என்னா இங்க அப்பாவும் புள்ளையும் வெட்டி அரட்டை, சீக்கிரம் வந்து சாப்பிடுங்க. வேலய முடிக்கணும்.

அ:-டேய், வா சாப்பிட போலாம், இல்லாட்டி அம்மா டென்ஷன் ஆயிருவாங்க. (மனதுக்குள் - அப்பாடி.. இப்போதைக்கு தப்பிச்சேன்..)

பை:- போப்பா... ஆக்சுவலா ஆம்பளைங்க தினம்தான் கொண்டாடி நம்ம ரைட்ஸ்லாம் கேக்கணும் (முனகிக்கொண்டே போகிறான்)

பி.கு - படிப்பவர்கள் எல்லாரும் தயவு செய்து, நல்ல பாய்ண்ட்ஸ் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. திருப்பி டாபிக் ஆரம்பிச்சா யூஸ் ஆவும்.

Friday, March 6, 2009

ஜே.கே.ரித்திஷ்-தாய்க்குலங்கள் ஜாக்கிரதை



நம்ம தல ஜே.கே.ரித்தீஷ் டிவி சீரியல் தயாரிக்கிறார் என்ற அதிர்ச்சியான தகவலை அதிகாரபூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரே அதில் நடிக்கிறாரா(வருவாரா..) என்ற திகில் செய்தி இதுவரை தெரியவில்லை.

தாய்க்குலங்களுக்கு எச்சரிக்கை -இந்த சீரியல் கண்டிப்பாக பெண்களை கவரும் என்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.

கலைஞர் டிவி பக்கம் செல்பவர்கள் எதற்கும் தக்க பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கமல் தோளில் சுலக்ஷணா

சன் டிவியில் இன்று(எங்க ஊர்ல) "தூங்காதே தம்பி தூங்காதே" படம். இரவு பதினோரு மணிக்கு மேல் என்றாலும் வாரக்கடைசிதானே என்று தமிழ்மணம் ஒரு பக்கமும், படம் ஒரு பக்கமுமாக உட்கார்ந்திருந்தேன்.

"சும்மா நிக்காதீங்க" பாட்டு வந்ததும் சுதாரித்து டிவியை மட்டும் பார்க்க ஆரம்பித்தேன்.அந்த காலத்துலயே சுலக்ஷணாவ வாயப்பொளந்துட்டு பார்த்தது கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சுருச்சு.பாவாடை தாவணி அவ்வளவு பாந்தமாக இருக்கும் அவருக்கு.

கிட்டத்தட்ட பாட்டு முழவதும் சுலக்ஷணா கமலின் மேல் தான் உட்கார்ந்திருப்பார்.ஏதோ சின்னக்குழந்தையை போல் கமல் அவரை இடுப்பிலும், தோளிலும், முதுகிலும் தூக்கி விளையாடுவார்.

கமல் இன்னமும் ஹீரோதான். சுலக்ஷணா???. எனக்கு ஒரே ஒரு சின்ன்ன்ன்ன ஆசைதான்.
அடுத்த படத்துல சுலக்ஷணாவை அதே மாதிரி கமல் தூக்கிகிட்டு டான்ஸ் ஆடணும்.(ஏண்டா இந்த கொல வெறி?... தசாவதாரம் வந்து இவ்ளோ நாளாயுமா ஒன் வெறி அடங்கல?)

பத்து நிமிஷத்தில் போனஸாக ராதாவுடன் "அட ராமா எங்கிட்ட டூப்பு விடலாமா??" பாட்டு. சுலக்ஷணா பாட்டு அளவுக்கு இல்லன்னாலும், பக்கத்துல இருந்த தங்கமணி "வழியற வாய தொடைக்க கூடாதான்னு" கேக்கற அளவுக்கு இருந்துச்சு.

ஒரு சீன்ல கமல் ராதாகிட்ட "நான் மாறு வேஷத்துல இருக்கேன்னு எப்படி கண்டு புடிச்ச?"
அப்படின்னு கேப்பாரு. போக்கிரியில் வரும் வடிவேலுவை ஞாபகமூட்டினார்.

குருதிப்புனல், அன்பே சிவம் படமெல்லாம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது. அவரா இவுரு?????..