Friday, February 20, 2009

காஞ்சித் தலைவனுக்கு 10 பதில்கள்

ஒரிஜினல் கேள்விகள் இங்கே....


1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?

பத்துக்கே காதுல புகை வர்ர அளவுக்கு யோசிக்க வேண்டி இருக்கு.


2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?

மேல் இருக்கும் பதிலே இதுக்கும்.


3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?

எப்படியும் இவங்களும் பதில் சொல்லப்போறதில்ல அதனால...


4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?

என்னோட கேள்விகளுக்கு(முந்தைய பதிவுல) பதில் சொன்னா, எனக்கு நைஜீரியா லாடடரி பரிசு வந்த உடன பாதி உண்டு.


5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?

தலைய சொறிஞ்சு சொறிஞ்சுதான்


6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?

அப்படியாவது பதில் கிடைக்குதான்னு பார்க்கத்தான்.


7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?

பதிவுலக வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா..


8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?

இத முதல் கேள்வியா இல்ல கேட்ருக்கனும்


9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?

இல்ல. பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டாத்தான்.


10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?

நீங்களும் இதே மாதிரி ஒரு பத்து பதில் எழுதிருங்க.

பின்னூட்டத்துலதான் மொதல்ல பதில் சொன்னேன்.
கஷ்டப்பட்டு பதில் எழுதிட்டு அத நம்ம பதிவுல போடலேன்னா எப்படி?

Thursday, February 19, 2009

பரிசல் போட்ட பதிவுக்கு எசப்பதிவு

(தாமிராவுக்கும்,ரமேஷ் வைத்யாவுக்கும் அப்றமா...)

என் பையன் கிட்ட ஒரே ஒரு வார்த்தை தான் கேட்டேன், கொட்டி தீத்துட்டான். ஹ்ம்ம்... பிஞ்சு மனசுல இவ்வளவு வேதனையா?

1.நான் கார்ட்டூன் பார்த்தா மட்டும் கண்ணு கெட்ரும்னு சொல்றீங்க. நீங்க மட்டும் கிரிக்கெட் மேட்ச் 10 மணி நேரம் தொடர்ந்து பாக்கறீங்க?

2. எப்பவுமே பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்றீங்க, ஆனா உங்க பாஸ் கால் பண்ணா, "அப்பா செல் போன மறந்துட்டு ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருக்கார்னு" சொல்ல சொல்றீங்க?

3. அன்றைய வேலையை அன்றைக்கே செய்யணும்னு சொல்றீங்க. ஆனா அம்மா பாத்ரூம் லைட் எரியலேன்னு சொன்னா, சண்டே பார்த்துக்கலாம்னு சொல்றிங்களே?

4. நான் ரப்பர், பென்சில் தேடினா எதையும் ஒழுங்கா இடத்துல வைக்கறதில்லன்னு திட்டற நீங்க, அப்பப்போ சாவி, பர்ஸ் எல்லாம் தேடறீங்களே?

5. நான்லாம் உன் வயசில எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு சொல்றீங்களே, உங்கப்பா அதே வயசுல இன்னும் எவ்ளோ அதிகமா கஷ்டப்பட்டார்னு சொல்வீங்களா?

6. பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கணும்னு சொல்ற நீங்க மட்டும், டிவில வர்ற ஒரு வயசான கறுப்பு கண்ணாடி தாத்தாவ பார்க்கறப்பல்லாம் கன்னா பின்னான்னு திட்டறீங்களே?

7. என் க்ளாஸ்ல ஃப்ர்ஸ்ட் ரேங்க் வாங்கற பையன, அவன் எவ்ளோ நல்லா படிக்கறான்னு சொல்றீங்க. ஆனா, உங்க ஆபிஸ்ல மேனேஜர் ப்ரமோஷன் வாங்கின ராமு அங்கிள, காக்கா புடிச்சே வாங்கிட்டான்னு சொல்றது கரெக்ட்டா?

8. கரெண்ட் வேஸ்டாவுது லைட்ட அணை, ஃபேனை அணைன்னு சொல்ற நீங்க மட்டும் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் உக்காந்து மொக்க பதிவெல்லாம் படிக்கறீங்களே?

9. நான் தப்பா கணக்கு போட்டா அவ்வளவு திட்டற நீங்க, அம்மா பண்ற சாம்பார் நல்லா இல்லன்னா சத்தம் போடாம சாப்டுட்டு போறது ஏன்?

10. எக்ஸர்சைஸ் பண்ணனும், ஒடியாடி வெளையாடணும்னு சொல்ற உங்களுக்கு மட்டும் தொப்பை பெரிசாயிட்டே போவுதே?

இன்னும் நெறைய சொன்னான், ஆனா அதெல்லாம் போட்டா என் இமேஜ் ஸ்பாயிலாயிடும்னு
எடிட் பண்ணிட்டேன்.

பரிசல், தாமிரா மற்றும் ரமேஷ் வைத்யா பதிவுகளின் தொடர்ச்சி.

Tuesday, February 17, 2009

குற்றமும் பிண்ணணியும்

நான்தான் முன் ஜென்மத்தில் அக்பரின் மனைவி ஜோதாபாய் என்கிறார் ஆதித்தனார் குடும்ப பெண்ணான அருணா.

அவரை அழைத்துக்கொண்டு பதேபூர் சிக்ரி, ஆக்ரா என்று ஊர் ஊராக போய் என்ன செய்கிறார் என்று வீடியோ எடுத்து காண்பித்தார்கள்.

கோபிநாத்தின் வர்ணணைகளுடன், உணர்ச்சிபூர்வமான இசையமப்புடன் அரண்மனைகளின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து புறப்பட்டார்கள்.

ஏதோ அசத்தலாக காட்டப்போகிறார்கள் என்று பார்த்தால்...

அங்கங்கே போய் நின்றார்...

என்னென்னமோ ஃபீலிங்க்ஸா இருக்கு என்றார்..

இதையெல்லாம் இழந்துட்டமேன்னு இருக்கு என்று புலம்பினார்..

இது பிரசவ அறையா?, இதுதான் குளிக்கிற அறையா? இங்கதான் கக்கூஸா என்று பக்கத்தில் வந்த கைட் சொல்வதை எல்லாம் திருப்பி சொல்லி விட்டு இங்க "இருந்தா" மாதிரி இருக்கு, இங்க "போனா" மாதிரி இருக்கு என்று கூறிக்கொண்டே வந்தார்.

அவ்வப்போது அரண்மணை சுவற்றில் சாய்ந்து கொண்டு கண்ல ஜலம் வெச்சுண்டு அழுகவும் செய்தார்.

இந்த இடத்தில் இப்படி இருக்கும் என்றோ...இந்த அறைக்கு இப்படி போக வேண்டும் என்று குறைந்த பட்ச அடையாளங்களை கூட கூறவில்லை.

இதற்கு 30 நாள் ட்ரெய்லர் போட்டு 3 நாள் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

ஆனால் ஒரு நல்ல விஷயம், அரண்மணைகளை நன்றாக சுற்றி காட்டினார்கள். இந்தியாவில் புராதான சின்னங்களை நன்றாக பராமரிப்பது புரிந்தது.அப்படியே ஜோதாபாய் பிறந்து, வளர்ந்த ஊர்களையும் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் (அருணாவுக்கு அதெல்லாம் ஞாபகம் இல்லியோ?).

இதில் ஹைலைட்டே நிகழ்ச்சியின் பெயர்தான்.."நடந்தது என்ன? குற்றமும் பிண்ணணியும்" (விஜய்)...

எதை குற்றம் என்கிறார்கள்?

Thursday, February 12, 2009

கள்ள தொடர்பு இருக்குமோ


இன்னொரு கேப்டனையும் அவுட்டாக்கிய புண்ணியத்தை கட்டிக் கொண்டார் தோனி. இங்கிலாந்து அணி இங்கே வந்து மண்ணை கவ்வியதும், பீட்டர்சனும், கோச் பீட்டர் மூர்ஸும் “கா” விட்டுக்கொண்டதும், பின்னர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததும் பழசு. இப்போது இலங்கையை அவர்கள் குகைக்குள்ளேயே நுழைந்து ஒளிய இடமில்லாமல் ஒட ஒட விரட்டியதால் ஜெயவர்தனேவும் கால் கடுதாசி கொடுக்க போகிறாராம்.

ஓரு மேட்ச் கூட பார்க்க முடியலியே, சண்டேல வேற வருதேன்னு கடைசி மேட்ச் பார்க்கலாம்னு மெனக்கெட்டு உக்காந்தா நல்லா ஏமாத்திட்டாங்க. சீட்டு கட்டு கார்டெல்லாம் வரிசையா நிக்க வெச்சு தட்டி வுட்டா மாதிரி கட.. கடன்னு விக்கெட் உழவும் வெறுத்து போச்சு. தோனிக்கு முந்தைய இந்திய அணியை ஞாபகமூட்டினார்கள்.

நம்ம அதிர்ஷ்டத்த நொந்துகிட்டாலும், பாராட்டாம இருக்க முடியல. இனிமே எந்த நாட்டு கிரிக்கெட் செலெக்க்ஷன் கமிட்டியாவது கேப்டன தூக்கணும்னா இந்தியாவோட ஒரு சீரிஸ் ஆடிட்டு வான்னு நம்பிக்கையா அனுப்பலாம்.

இதுக்கு நடுவுல அமெரிக்க பொருளாதாரத்துக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் ஏதோ கள்ள தொடர்பு இருக்குமோன்னு நெனைக்கிற அளவுக்கு அதல பாதாளத்துக்கு போயிட்ருக்காங்க.

இளமையான அணி... பழைய வாடை அடிக்காம தோனியும் எல்லாம் வல்ல இறைவனும் கடாட்சம் காட்ட வேண்டும்.

முதல்ல “க்ளீன் போல்ட்” ன்னுதான் டைட்டில் வெச்சேன் கடைசில பேர பார்த்தவுடனே விரசா வந்து பார்ப்பீங்கன்னுதான் மாத்திட்டேன். ஏமாந்தீங்களா...

சும்மா எதேச்சையாதான் தீபிகா படுகோனே படத்த போட்டேன். உள்குத்தெல்லாம் இல்ல.


Thursday, January 29, 2009

"தன்யவாத்"


இன்று காலை எனக்கு ஒரு போன். இந்தியா நம்பர், அதுவும் டெல்லி கோட். எனக்கு யார்ரா டெல்லிலேர்ந்து கால் பண்றாங்க, ராங்க் நம்பராத்தான் இருக்கும்னு நெனச்சு பட்டன அமுத்தினா, "க்யா மே அறிவிலி ஜி சே பாத் கர் ரஹா ஹூன்?" அப்படின்னுது ஒரு கரகர குரல். நானும் எனக்கு தெரிஞ்ச "கோன் பனேகா க்ரோர்பதி" ஹிந்தில "ஹாங்க் ஜி" அப்படின்னேன்.

இதுக்கு மேல நமக்கு "கம்ப்யூட்டர் ஜி தாலா லகாவ்" மட்டும்தான் தெரியும் அப்படிங்கற்தால "Can you please speak in English, I am not that fluent in Hindhi" அப்படின்னு அவசர அவசரமா சொன்னேன்.

இதுக்கு மேல ஒரே ஒரு வாக்கியம் மட்டுந்தான் என் காதுல விழுந்துது.

நாந்தான் அதுக்கப்புறம் மயக்கம் போட்டு விழுந்துட்டனே.

அந்த வாக்கியம் " “You have been conferred with Padmashree award for your valuable contribution in tamil blogs”

ஒன்றறை மணி நேரம் கழித்து மயக்கம் தெளிஞ்சு, என்னடா இது ஒரே ஒரு Blog தான். அதிலயும் மூணே மூணு போஸ்ட் தான் போட்றுக்கோம். பின்னூட்டம் கூட நாலஞ்சு தான் எழுதிருக்கோம். அதுக்குள்ள் நம்ம திறமைக்கு இவ்வள்வு மரியாதையா?. அப்படின்னு ஒரு மாதிரி (ஒரு ஜக் பீரை ஒரே கல்ப்ல அடிச்சாப்புல) ஜிவ்வுன்னு இருந்துது.

எனக்கு வந்த நம்பருக்கு திரும்ப கால் பண்ணா, யாரோ செகரெட்டரி தான் ராஷ்டிரபாஷால பேசறா. ஒன்னும் புரியல.

இப்ப அவசரமா டிவி நியூஸ் பாக்க போய்ட்டிருக்கேன். மீதியெல்லாம் மீடியால பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பின் குறிப்பு 1 – உங்கள் வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பவும். தொலைபேசி, அரசு அதிகாரிகள் எந்த நேரமும் கூப்பிடலாம் என்பதால் ஃப்ரீயாக வைத்திருக்க வேண்டும்.

பின் குறிப்பு 2 – என் ஊர் ஜம்மு காஷ்மீரோ பெயர் ஹஷ்மத் உல்லா கானோ கிடையாது.

பின் குறிப்பு 3 - இந்த Blog க்கு ஏன் இந்த டைட்டில் அப்படிங்கறீங்களா. எனக்கு தெரிஞ்ச இன்னொரு ஹிந்தி வார்த்தைய கூட சொல்லாம மயக்கம் போட்டுட்டனா, அதான் டைட்டில்லயாவுது சொல்லலாம்னு வெச்சேன்.

Wednesday, January 28, 2009

டக்குன்னு சிரிச்சேன்


ப்ளாஸ்டிக் பையிலே அடைச்ச கருங் குரங்கை பார்த்திருக்கியா?

இல்லியே...

இந்தா உன் ஐடி கார்ட்.


நன்றி-"அசத்த போவது யாரு" விளம்பரம்.

Saturday, October 4, 2008

அரசியல் இலவசங்கள்



இந்தியாவில் வேறு எங்காவது இந்த அளவுக்கு அரசியல் இலவசங்கள் உண்டா என்று சந்தேகமாக உள்ளது. இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து போன்ற ஏழை விவசாயிகளுக்கான (இதை பல கொழுத்த பண்ணையார்கள் முறை கேடாக பயன்படுத்தினாலும்) திட்டங்கள் போக பெரும்பான்மையானவை எல்லாம் முட்டாள்தனமான பண விரயமாகவே இருக்கின்றன.


எம்ஜியார் காலத்தில் பல்பொடி , ஜெயலலிதா காலத்தில் செருப்பு போன்றவற்றுக்கெல்லாம் சிகரமாக இப்போது கலர் டிவி. அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாத பல குடும்பங்கள் இருக்கின்ற நிலையில் கலர் டிவி எந்த வயிற்றை நிரப்பவோ தெரியவில்லை. சொந்தங்களையும் பந்தங்களையும் (கோலங்கள், அரசி.... ) பார்த்து இவர்கள் வாழ்க்கை நிலை எப்படி முன்னேறுமோ கழகங்களுக்குத்தான் வெளிச்சம்.

அப்படியாவது இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் (டிவின்னு சொல்லிட்டு போயேன்) எல்லாம் இல்லாதவர்களுக்குத்தான் போகிறதா என்று பார்த்தால், வயிறு எரிகிறது. திருச்சியில் அறுநூறு குடும்பங்கள் இருக்கும் ஒரு ராணுவ தளவாட தொழிற்சாலை குடியிருப்பில் அனைவருக்கும் இந்த கலர் டிவி விநியோகம் செய்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் பத்தாயிரம் சம்பாதிக்கும் இந்த குடும்பங்கள் அனைத்திலும் மிக நிச்சயமாக மானும் மயிலும் ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஒரு டிவிக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றால் கூட கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்ச ரூபாய் இந்த ஒரு இடத்தில் மட்டும் வீணடித்து இருக்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் இந்த தொழிற்சாலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலைக்கு சென்றதுதான் என் எரிச்சலுக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை.