Thursday, January 29, 2009

"தன்யவாத்"


இன்று காலை எனக்கு ஒரு போன். இந்தியா நம்பர், அதுவும் டெல்லி கோட். எனக்கு யார்ரா டெல்லிலேர்ந்து கால் பண்றாங்க, ராங்க் நம்பராத்தான் இருக்கும்னு நெனச்சு பட்டன அமுத்தினா, "க்யா மே அறிவிலி ஜி சே பாத் கர் ரஹா ஹூன்?" அப்படின்னுது ஒரு கரகர குரல். நானும் எனக்கு தெரிஞ்ச "கோன் பனேகா க்ரோர்பதி" ஹிந்தில "ஹாங்க் ஜி" அப்படின்னேன்.

இதுக்கு மேல நமக்கு "கம்ப்யூட்டர் ஜி தாலா லகாவ்" மட்டும்தான் தெரியும் அப்படிங்கற்தால "Can you please speak in English, I am not that fluent in Hindhi" அப்படின்னு அவசர அவசரமா சொன்னேன்.

இதுக்கு மேல ஒரே ஒரு வாக்கியம் மட்டுந்தான் என் காதுல விழுந்துது.

நாந்தான் அதுக்கப்புறம் மயக்கம் போட்டு விழுந்துட்டனே.

அந்த வாக்கியம் " “You have been conferred with Padmashree award for your valuable contribution in tamil blogs”

ஒன்றறை மணி நேரம் கழித்து மயக்கம் தெளிஞ்சு, என்னடா இது ஒரே ஒரு Blog தான். அதிலயும் மூணே மூணு போஸ்ட் தான் போட்றுக்கோம். பின்னூட்டம் கூட நாலஞ்சு தான் எழுதிருக்கோம். அதுக்குள்ள் நம்ம திறமைக்கு இவ்வள்வு மரியாதையா?. அப்படின்னு ஒரு மாதிரி (ஒரு ஜக் பீரை ஒரே கல்ப்ல அடிச்சாப்புல) ஜிவ்வுன்னு இருந்துது.

எனக்கு வந்த நம்பருக்கு திரும்ப கால் பண்ணா, யாரோ செகரெட்டரி தான் ராஷ்டிரபாஷால பேசறா. ஒன்னும் புரியல.

இப்ப அவசரமா டிவி நியூஸ் பாக்க போய்ட்டிருக்கேன். மீதியெல்லாம் மீடியால பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

பின் குறிப்பு 1 – உங்கள் வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பவும். தொலைபேசி, அரசு அதிகாரிகள் எந்த நேரமும் கூப்பிடலாம் என்பதால் ஃப்ரீயாக வைத்திருக்க வேண்டும்.

பின் குறிப்பு 2 – என் ஊர் ஜம்மு காஷ்மீரோ பெயர் ஹஷ்மத் உல்லா கானோ கிடையாது.

பின் குறிப்பு 3 - இந்த Blog க்கு ஏன் இந்த டைட்டில் அப்படிங்கறீங்களா. எனக்கு தெரிஞ்ச இன்னொரு ஹிந்தி வார்த்தைய கூட சொல்லாம மயக்கம் போட்டுட்டனா, அதான் டைட்டில்லயாவுது சொல்லலாம்னு வெச்சேன்.

Wednesday, January 28, 2009

டக்குன்னு சிரிச்சேன்


ப்ளாஸ்டிக் பையிலே அடைச்ச கருங் குரங்கை பார்த்திருக்கியா?

இல்லியே...

இந்தா உன் ஐடி கார்ட்.


நன்றி-"அசத்த போவது யாரு" விளம்பரம்.

Saturday, October 4, 2008

அரசியல் இலவசங்கள்



இந்தியாவில் வேறு எங்காவது இந்த அளவுக்கு அரசியல் இலவசங்கள் உண்டா என்று சந்தேகமாக உள்ளது. இலவச மின்சாரம், விவசாய கடன் ரத்து போன்ற ஏழை விவசாயிகளுக்கான (இதை பல கொழுத்த பண்ணையார்கள் முறை கேடாக பயன்படுத்தினாலும்) திட்டங்கள் போக பெரும்பான்மையானவை எல்லாம் முட்டாள்தனமான பண விரயமாகவே இருக்கின்றன.


எம்ஜியார் காலத்தில் பல்பொடி , ஜெயலலிதா காலத்தில் செருப்பு போன்றவற்றுக்கெல்லாம் சிகரமாக இப்போது கலர் டிவி. அடுத்த வேளை சோற்றுக்கே வழி இல்லாத பல குடும்பங்கள் இருக்கின்ற நிலையில் கலர் டிவி எந்த வயிற்றை நிரப்பவோ தெரியவில்லை. சொந்தங்களையும் பந்தங்களையும் (கோலங்கள், அரசி.... ) பார்த்து இவர்கள் வாழ்க்கை நிலை எப்படி முன்னேறுமோ கழகங்களுக்குத்தான் வெளிச்சம்.

அப்படியாவது இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் (டிவின்னு சொல்லிட்டு போயேன்) எல்லாம் இல்லாதவர்களுக்குத்தான் போகிறதா என்று பார்த்தால், வயிறு எரிகிறது. திருச்சியில் அறுநூறு குடும்பங்கள் இருக்கும் ஒரு ராணுவ தளவாட தொழிற்சாலை குடியிருப்பில் அனைவருக்கும் இந்த கலர் டிவி விநியோகம் செய்திருக்கிறார்கள். குறைந்த பட்சம் பத்தாயிரம் சம்பாதிக்கும் இந்த குடும்பங்கள் அனைத்திலும் மிக நிச்சயமாக மானும் மயிலும் ஆடிக்கொண்டுதான் இருந்திருக்கும். ஒரு டிவிக்கு இரண்டாயிரம் ரூபாய் என்றால் கூட கிட்டத்தட்ட பன்னிரண்டு லட்ச ரூபாய் இந்த ஒரு இடத்தில் மட்டும் வீணடித்து இருக்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் இந்த தொழிற்சாலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு வேலைக்கு சென்றதுதான் என் எரிச்சலுக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை.

Thursday, September 18, 2008

சேதிகளும் சன் செய்திகளும்



செய்தி - தமிழகத்தில் மின் பற்றாக்குறை. ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் மின் வெட்டு.

சன் செய்திகள் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் உள்ளாடை உற்பத்தி பாதிப்பு. தீபாவளி நெருங்கும் நேரத்தில் பொதுமக்கள் அவதி.

கிறுக்கன் செய்தி -பாவம் தமிழர்கள் எல்லோரும் தீபாவளிக்கு உள்ளாடை இல்லாமல் திரிய போகிறார்கள்.

*********************

செய்தி - சென்னை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ஏற்பட்டது. நெரிசல் மிகுந்த ரங்கநாதன் தெரு கடைகளில் அவசர கால வாயில்கள் இல்லை.

சன் செய்தி - இனிமேலாவது அரசு இத்தகைய கடைகள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதே பொது மக்களின் கேள்வி
சன் நேயர் - " இனிமேலாச்சும் அரசு வந்து இந்த மாதிரி பாதுகாப்பு இல்லாத கடைகள் மேல நடவடிக்கை எடுக்கணும் "

கிறுக்கன் செய்தி - பொதுமக்கள் (குறைந்த பட்சம் அந்த நேயர் மட்டுமாவது ) எல்லோரும் ஏன் இந்த மாதிரி கடைகளுக்கு போக வேண்டாம் என்று முடிவெடுக்க கூடாது.
*********************

Monday, August 18, 2008

இன்னைக்குதான் ஆரம்பிச்சேன்



என்னமோ எல்லாரும் ப்ளாக் ப்ளாகுங்கறாங்களே, நம்மளும்தான் ஒன்ன ஆரம்பிச்சு வெப்போமேன்னு, இன்னைக்கு ஸ்டார்ட் பண்ணேன். எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியலே. என்ன எழுத போறேனோ தெரியலே. பார்க்கலாம், இனிமேதான் யோசிக்கணும். அடுத்தது என்னிக்கு திரும்பி வரேன்னு பார்ப்போம். யாராவது படிப்பீங்களா என்ன? படிச்சா சொல்லுங்க.

இப்போதைக்கு byeeeeeee..........